×

தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா உள்பட 12 பேருக்கு தயான் சந்த் கேல் ரத்னா விருது வழங்கப்படும் என அறிவிப்பு..!!

டெல்லி: ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா உள்பட 12 பேருக்கு தயான் சந்த் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருது வழங்குவது வழக்கம். இந்த நிலையில் இந்த முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் தடகளத்தில் தங்கம் வென்ற தங்க மகன் நீரஜ் சோப்ரா உட்பட 11 விளையாட்டு வீரர்களுக்கு மேஜர் தயான் சந்த் விருது கொடுத்து கவுரவிக்க பரிந்துரைத்துள்ளது தேசிய விளையாட்டு விருதுகள் குழு. அதேபோல 35 தடகள வீரர்களுக்கு அர்ஜூனா விருது வழங்குவதற்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, தற்போது தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா உள்பட 12 பேருக்கு தயான் சந்த் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நீரஜ் சோப்ரா, ரவிக்குமார், லவ்லினா, ஸ்ரீஜேஷ், மிதாலி ராஜ், மன்பிரீத் சிங், சுனில் சேத்ரி, அவனி லேகரா, பிரமோத் பகத், சுமித் அன்டில், கிருஷ்ணா நகர், மனிஷ் நார்வல் ஆகியோருக்கு நவம்பர் 13ல் டெல்லியில் நடைபெறும் விழாவில் 12 வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Tian Chand Gael Ratna ,Niraj Chopra , Neeraj Chopra, Dayan Chand Khel Ratna Award, Announcement
× RELATED ஈட்டி எறிதலில் உலக நாடுகளை மிரட்டும்...